மெல்போர்ன் நகரில் தொடங்கியது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி : தடுப்பூசி போடாததால் ஜோகோவிச்சின் 21-வது கிராண்ட்ஸ்லாம் கனவு தகர்ந்தது
Jan 17 2022 10:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. 'நம்பர் ஒன்' வீரரான ஜோகோவிச்சின் 'விசா' ரத்து செய்யப்பட்டதால், கோப்பை வெல்லும் கனவு பறிபோனது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, மெல்போர்னில் இன்று காலை தொடங்கியது. வரும் 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில், கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 405 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. கொரோனா தடுப்பூசி காரணமாக, விசா ரத்து செய்யப்பட்டதால் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் இத்தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், அலெக்சாண்டர், ஸ்வெரவ், சிட்சிபாஸ், மெத்வதேவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரஃபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் தலா 20 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலை வகிக்கின்றனர். இதில் பெடரர் காயம் காரணமாக போட்டியில் கலந்து கொள்ளாத நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி விவகாரத்தில் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ரஃபேல் நடால், 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா, ஆஸ்லி பார்ட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றால் 23 கோடி ரூபாயும்இடம் வென்றால் 11 கோடி ரூபாயும் பரிசுத் தொகை கிடைக்கும். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் முதல் சுற்றில் வென்றாலே வீரர்களுக்கு 40 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.