இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி paarl மைதானத்தில் இன்று தொடக்கம் : இந்திய அணி கேப்டனான கே.எல்.ராகுல் பொறுப்பேற்பு
Jan 19 2022 6:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி paarl மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் இன்று தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் இரண்டு போட்டிகள் paarl மைதானத்திலும் கடைசி போட்டி cape town-ல் நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் மோதுவது 85-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 84 ஆட்டத்தில் இந்தியா 35-ல், தென் ஆப்பிரிக்கா 46 -ல் வெற்றிபெற்றுள்ளன. நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதனால் ஒருநாள் தொடரை வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது என்பது குறிப்பிடத்தகது.