புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே நடைபெற்ற பாய்மரப் படகுப் போட்டி - 28 படகுகள் பங்கேற்பு
Jan 19 2022 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, தைப்பூசத்தை முன்னிட்டு பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு புதுக்குடி கிராமத்தில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடத்தப்பட்டது. தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு படகிலும் 6 வீரர்கள் உட்பட 168 வீரர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற படகுகளின் உரிமையாளர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.