தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற தூத்துக்குடி மாணவி : மிதிவண்டி வாங்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை
Jan 20 2022 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் கீழமுடிமண் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில், குழு பிரிவில் தங்கப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ள போதும், மைதானத்தில் பயன்படுத்தக்கூடிய மிதிவண்டி வாங்க வசதியில்லை என்றும், அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீமதி கோரிக்கை விடுத்துள்ளார்.