தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை- இந்திய அணிக்‍கு ஒரு கோடி ரூபாய் பரிசு

May 15 2022 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தோனேசியா அணியுடன், இந்திய ஆடவர் அணி இன்று பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது. குறிப்பாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்‍ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்‍ சாய்ராஜ்-சிராக்‍ ஷெட்டி இணை வெற்றி வாகை சூடியது. இதன்மூலம் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதையடுத்து இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணியினருக்‍கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணிக்‍கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00