ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : லக்னோ - ராஜஸ்தான் அணிகள் மோதல் : 24 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி
May 16 2022 8:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 179 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.