அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவேன் - சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லாமல் செல்லமாட்டேன் என்று தோனி உறுதி
May 21 2022 9:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஓய்வு குறித்து தோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், சென்னையில் விளையாடாமல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெறுவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அநீதி இழைத்து போல் ஆகிவிடும் என்றார். இந்த ஆண்டு மும்பையில் மட்டும் விளையாடிவிட்டு சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லாமல் செல்வது நன்றாக இருக்காது என்றும் கூறினார். அடுத்த ஆண்டு சென்னையில் போட்டி நடைபெறும் என நம்புவதாக கூறிய தோனி, நிச்சயமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவேன் என கூறினார்.