நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியிலும் சென்னை அணி தோல்வி- சென்னையை வென்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்
May 21 2022 9:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது கடைசி போட்டியில் தோல்வியுடன் வெளியேறியது.
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்று லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து கான்வே உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். கான்வே ஆட்டமிழந்த நிலையில் மொயின் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. தனி ஆளாகப் போராடிய மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 26 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசி கட்டத்தில் அஸ்வின் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.