சென்னையில் தொடங்கியது தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டி : முதல் ஆட்டத்தில் புதுச்சேரியை வென்று தமிழக அணி அபாரம்
May 21 2022 10:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில், தமிழக அணி அசத்தல் வெற்றி பெற்றது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 22-வது தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 16 மாநிலங்களில் இருந்து ஆண், பெண் என மொத்தம் 50 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் முறையில் நடத்தப்படும் போட்டியில், முதல் நாள் ஆட்டத்தில் தமிழகம், புதுச்சேரி ஆண்கள் அணியினர் மோதினர். இதில் 2க்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட் கணக்கில் தமிழகம் அணி அசத்தல் வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வீரர்களுக்கு, இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்த பீச் வாலிபால் போட்டி, மீண்டும் நடப்பது வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.