ஐபிஎல் 15-வது சீசனின் கடைசி லீக் ஆட்டம் : ஹைதரபாத் அணியை, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி
May 23 2022 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் 15-வது சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில், ஹைதரபாத் அணியை, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்கடித்தது.
பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே குஜராத், லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் தகுதி பெற்ற நிலையில், மும்பையில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய ஹர்ப்ரீத் பிரார், 3 விக்கெட்களை கைப்பற்றினார். 158 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.