தென்னாஃப்ரிக்காவுக்கு எதிரான T-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு : தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு மீண்டும் வாய்ப்பு
May 23 2022 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னாஃப்ரிக்காவுக்கு எதிரான T-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை, B.C.C.I அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாஃப்ரிக்க கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. 9-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேற்று அறிவிக்கப்பட்டது.
கே.எல். ராகுல் தலைமையிலான அணியில், ரிஷப் பந்த், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஆகியோர், விக்கெட் கீப்பர்களாக இடம்பெற்றுள்ளனர்.
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் அய்யர், சஹால், குல்தீப் யாதவ், அக்சர் படேல், பிஷ்னோய், புவனேஷ்வர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளதாக, B.C.C.I தெரிவித்துள்ளது.