இத்தாலியில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டி : 15-ஆவது சுற்றில் கியுலியோ சிக்கோன் முதலிடம் பிடித்து வெற்றி
May 23 2022 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலியில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில், 15-ஆவது சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த கியுலியோ சிக்கோன் முதலிடம் பிடித்து வெற்றிபெற்றார்.
ரிவராலோ கான்வேஸிலிருந்து காக்னே வரை சுமார் 177 கி .மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்த சைக்கிள் பந்தயத்தில், ஏராளமான சைக்கிள் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டி தொடங்கியதும் சைக்கிளிங் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மின்னல் வேத்தில் பந்தய தூரத்தை நோக்கி விரைந்தனர். இதில் 15-ஆவது சுற்றின்போது இத்தாலியைச் சேர்ந்த கியுலியோ சிக்கோன் முதலிடம் பிடித்து வெற்றிபெற்றார். இதனிடையே, முன்னாள் சாம்பியனான போர்ச்சுகலின் ஜோவா அல்மெய்டா 32 வினாடிகள் மூன்றாவது இடத்துக்கு பின் தங்கினார்.