தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி : அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவி சாம்பியன்
May 23 2022 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி, சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்- அன்புரோஜாவின் மகள் சர்வானிகா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். மாநில அளவிலான போட்டிகளில் ஏற்கனவே பரிசுகளை வென்றுள்ள சர்வானிகா, ஒடிசாவின் கிட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க போட்டியில், தமிழ்நாடு அணியில் இடம்பெற்றார். 9 சுற்றுகளில் 8 சுற்றுகளில் வெற்றி பெற்ற சர்வானிகா முதலிடம் பிடித்தார்.