பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா, டச்சு வீரர் மிடில்கூப் இணை இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
May 25 2022 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா, டச்சு வீரர் Middelkoop இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, டச்சு வீரர் Middelkoop இணை, பிரெஞ்சு இணை Luca Van, Sascha இணையை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய-டச்சு ஜோடி இந்த போட்டியை 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்றது. இதன் மூலம் அவர்கள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.