ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் குவாலிபயர் ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி - முதல் தொடரிலேயே நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை
May 25 2022 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் குவாலிபயர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்தநிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். சுப்மன் கில், மேத்யூவ் வேட் தலா 35 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஹர்த்திக் பாண்டியாவும், டேவிட் மில்லரும் ஜோடி சேர்ந்து ரன் குவிக்க ஆரம்பித்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மில்லர் தொடர்ந்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றிக்கு வித்திட்டார். இதன்படி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.