ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி
Jun 22 2022 7:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இலங்கை அணி 3 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வென்றுள்ளன. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்றிரவு நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை அணியினர் 49 ஓவர்கள் முடிவில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசலங்கா 110 ரன்கள் விளாசினார். இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மட்டும் 99 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 254 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.