அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி
Jun 29 2022 7:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் டி-20 தொடரை இந்தியா வென்றது.
இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சஞ்சு சாம்சன் - தீபக் ஹூடா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்களும், தீபக் ஹூடா 57 பந்துகளில் 104 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி, 20 ஒவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், பிஸ்னோய் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.