இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது
Jul 1 2022 8:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனவும், வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்திய அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் இந்த டெஸ்டில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் விளையாடாத ஆண்டர்சன் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.