காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற இந்தியாவின் அஸிந்தா ஷுலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து - மேலும் பல சிகரங்களை தொட வேண்டும் என விருப்பம்
Aug 1 2022 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் அஸிந்தாவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியின் 3ம் நாளான நேற்று இந்தியாவுக்கு சில பதக்கங்கள் கிடைத்தன. பளு தூக்குதலில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. தங்கம் வென்ற இந்திய வீரர் அஸிந்தா ஷுலிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமைதியான சுபாவத்திற்கும், மனஉறுதிக்கும் பெயர்போனவர் அஸிந்தா என தெரிவித்தார். இந்த சாதனைக்காக அவர் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ள திரு.மோடி, அஸிந்தாவின் எதிர்கால முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.