செஸ் ஒலிம்பியாட் போட்டி : சென்னை நீலாங்கரையில் கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு
Aug 1 2022 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக சென்னை நீலாங்கரை பகுதியில் கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு நடத்தப்பட்டது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. இதனை வரவேற்கும் விதமாக சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் ஆழ்கடலில் நீச்சல் வீரர்கள் செஸ் விளையாட்டில் ஈடுபட்டனர். அதற்கென பிரத்யேக உடையணிந்தபடி கடலில் சுமார் 60 அடி ஆழத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் என்பவரின் வழிகாட்டுதலின்படி சென்னையை சேர்ந்த நீச்சல் வீரர்கள் செஸ் விளையாடி செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.