மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இத்தாலி அணிக்கு எதிரான போட்டி - தமிழக வீரர் குகேஷ் வெற்றி
Aug 2 2022 7:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இத்தாலி அணிக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் நான்காவது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் ஆடவர் பிரிவில் ஏ அணி பிரான்சையும், பி பிரிவில் இத்தாலியையும், சி பிரிவில் ஸ்பெயினையும் எதிர்கொண்டன.
இதில் இந்தியாவின் பி அணி இத்தாலியை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வீழ்த்தியது. மேலும் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா இத்தாலியின் லாரன்ஸ் சோ இடிசி மோதி ஆட்டம் ட்ராவில் முடிந்தது எதிர்கொண்ட இந்தியாவின் ஏ அணி அனைத்தும் டிராவில் முடிந்தது.
இந்தியாவின் சி அணி முதல்முறையாக தோல்வி அடைந்தது. மேலும் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி 2.5 என்ற புள்ளிகளுடன் ஹங்கேரியை வீழ்த்தியது அதே போன்று இந்தியாவின் பி அணி எஸ்டோனியாவை தோற்கடித்தது மற்றும் மகளிர் அணியின் சி பிரிவில் ஜார்சியாவிடம் தோற்ற நிலையில் இந்திய வீரர் நந்திதா மட்டும் ஆறுதல் வெற்றி பெற்றார்.