செஸ் ஒலிம்பியாட்டில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி : நாட்டுப்புற கலைஞர்களுடன் நடனமாடிய வெளிநாட்டு வீரர்கள்
Aug 3 2022 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நடைபெற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சியில் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டு நடனமாடினர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு வந்துள்ள சர்வதேச வீரர்களுக்கு தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை தெரியப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியவற்றை 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஆடி அசத்தினர். அவர்களுக்கு சர்வதேச வீரர்களும் கலந்து கொண்டு நடனமாடினர்.