காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் அசத்தும் இந்தியா : பளுதூக்குதலில் லவ்ப்ரீத் சிங்கிற்கு வெண்கலம்
Aug 3 2022 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்களுக்கான பளுதூக்குதலின் 109 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதி போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் மொத்தம் 355 கிலோ தூக்கி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 192 கிலோவும் தூக்கினார். வெண்கல பதக்கம் வென்ற லவ்ப்ரீத் சிங்கிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதனிடையே மகளிர் ஜூடோ போட்டியில், 78 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை துலிகா மான் மொரீசியஸ் வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்லகம் என 14 பதக்கங்கள் பெற்று இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.