செஸ் ஒலிம்பியாட்டின் 6-ஆம் சுற்று ஆட்டத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்டிய இந்தியா - இந்திய வீராங்கனைகள் வைஷாலி மற்றும் கொனேரு ஆகியோர் அபார வெற்றி
Aug 4 2022 7:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6-ஆம் சுற்று ஆட்டத்தில் இந்தியா தொடா்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 சுற்றுகள் முடிந்த நிலையில் 6-ஆம் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி பலம் வாய்ந்த ஜார்ஜியாவை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. நானாவுக்கு எதிரான ஆட்டத்தில் கொனிரு 31-ஆவது நகா்த்தலில் வென்றார். ஜவாக்ஹிஷிவியுடனான ஆட்டத்தில் வைஷாலி அபார வெற்றி பெற்றார். இந்தியா பி அணிக்கும் - செக் குடியரசுக்கும் இடையேயான ஆட்டம் 2க்கு இரண்டு என டிரா ஆனது. இந்திய சி அணி, 3க்கு ஒன்று என ஆஸ்திரேலியாவை வென்றது. ஆடவர் பிரிவில் இந்திய ஏ அணி அர்மேனியாவை எதிர்த்து போட்டியிட்டது. இதில் இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார். இந்திய சி அணி 3.5க்கு 1.5 என லிதுவேனியாவை வீழ்த்தியது.