செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு நட்பு ரீதியான கால்பந்து போட்டிகள் - இந்தியா, ஆப்பிரிக்கா உட்பட 6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி
Aug 4 2022 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வந்துள்ள வீரர்களுக்கான நட்புரீதியிலான கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது.
44-வது ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒருநாள் ஒய்வு அளிக்கப்ட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு நட்புரீதியான கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, சென்னையின் எப்சி செஸ் கூட்டமைப்பினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், செஸ் வீரர்கள், பயிற்சியாளர்கள், செஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள், அலுவலர்கள் பங்கேற்று விளையாடினர். FIDE, இந்தியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய 6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியினை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.