காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்- பாரா பளுதூக்குதலில் இந்திய வீரர் சுதிர் வெற்றி பெற்று அபாரம்
Aug 5 2022 8:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுதிர், இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார். அவர் பாரா-பளுதூக்குதலில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் மொத்தம் 134.5 புள்ளிகளை பெற்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.