காமன்வெல்த் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டி : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி - இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Aug 8 2022 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் தொடரில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
காமன்வெல்த் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் வீராங்கனை Yeo Jia Min உடன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்தினார். இதில் சிறப்பாக விளையாடிய சிந்து, 21-18, 21-17 என்ற கேம் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தினார். இதன் மூலம் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.