47-வது சாம்பியன்ஷிப் போட்டி-சென்னை அணி வெற்றி : இந்திய அளவில் 22 ஆண்டுகளுக்குப்பின் தமிழக அணிக்கு இடம்
Aug 8 2022 8:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு மாநில கோ-கோ கழகம் சார்பாக நடத்தப்பட்ட 47வது சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 26 மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் கோவை அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. இந்திய அளவில் நடைபெறும் கோ-கோ போட்டியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணி தேர்வாகியுள்ளது.