44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா - சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது
Aug 9 2022 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று பத்தாவது சுற்று நிறைவடைந்தது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியின் ஆடவர் அணியின் ஏ பிரிவில் ஈரானுடன் போட்டியிட்டது. இதில் இரண்டரை புள்ளிகளுக்கு ஒன்றரை புள்ளி என்ற கணக்கில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் பி பிரிவு உஸ்பெகிஸ்தான் நாட்டுடன் போட்டியிட்டு இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் போட்டியை சமன் செய்தது. பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிந்தாரோவை 77 வது நகர்த்தலில் வீழ்த்தி இப் போட்டியில் வெற்றி பெற்றார்.
இந்திய அணியின் சி பிரிவில் ஸ்லோகியாவை எதிர்கொண்டது இப் போட்டியில் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்திய அணியின் மகளிர் பிரிவில் ஏ அணி கஜகஸ்தான் நாட்டை எதிர்த்து போட்டியிட்டு 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் பி பிரிவு நெதர்லாந்து அணியை எதிர்த்து போட்டியிட்டு மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் சி பிரிவில் ஸ்வீடனை எதிர்த்து போட்டியிட்டு மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வெற்றி பெற்றது.