காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீரங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து - கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என புகழாரம்
Aug 9 2022 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றுள்ள P.V. சிந்துவுக்கு, குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "தனிச்சிறப்பு வாய்ந்த P.V. சிந்து, சாம்பியன்களின் சாம்பியன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு என்றால் என்ன என்பதை அவர் மீண்டும் மீண்டும் காட்டுகிறார் - அவருடைய அர்ப்பணிப்பும் உறுதியும் பிரமிக்க வைக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற P.V. சிந்துவுக்கு வாழ்த்துக்கள் - அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.