கோலாகலமாக நிறைவடைந்தது காமன்வெல்த் போட்டிகள் : தேசிய கொடி ஏந்தி வலம் வந்தனர் இந்திய அணியை சேர்ந்த ஷரத் கமல், நிகாத் ஜரீன்
Aug 9 2022 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் நிறைவு விழா இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கான அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் ஏந்திச்சென்றனர்.
மொத்தம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரம்மாண்டமான விழாவுடன் தொடங்கிய இந்த தொடரின் நிறைவு விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை பனிரெண்டரை மணிக்கு நடைபெற்றது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து நிறைவு செய்துள்ளது. காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. கண்ணை கவரும் வாணவேடிக்கைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் மைதானத்தில் வண்ணமிகு உடையணிந்து வலம் வந்தனர். இந்திய அணியின் முன்பாக டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி மைதானத்தில் உலா வந்தனர். இந்த காமன்வெல்த் தொடரில் ஷரத் கமல் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், நிகாத் ஜரீன் குத்துச்சண்டையிலும் தங்கம் வென்றுள்ளனர்.