காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளு தூக்குதல், மல்யுத்தத்தில் பதக்கங்களை குவித்த இந்தியா
Aug 9 2022 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டனில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் இந்தியா முத்திரை பதித்து அதிக பதக்கங்களை வென்றுள்ளது.
இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் மணிப்பூரைச் சேர்ந்த சாய்கோம் மீராபாய் தங்கம் வென்று கணக்கை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ஆடவர் 67 கிலோ எடைப்பிரிவில் மிசோரத்தை சேர்ந்த ஜெரிமை லால்ரின்னுங்கா தங்கப்பதக்கத்தை வென்றார். ஆடவர் 73 கிலோ எடைபிரிவில் மேற்குவங்கத்தை சேர்ந்த அசிந்த ஷுலி தங்கத்தை வென்று அசத்தினார். பளுதூக்குதலில் சங்கெட் சர்கார், பிந்தியா ராணி, விகாஷ் தாகூர் ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தையும், குருராஜ பூஜாரி, ஹரீந்தர் கவுர், லப்பிரீத், குர்தீப் சிங் ஆகியோர் வெண்கலமும் வென்றனர். மல்யுத்தத்தில் இந்த முறையும் இந்தியா ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், தீபக் பூனியா, ரவிகுமார் தாஹியா, வினேஷ் போகத், ஆகியோர் தங்கத்தை வென்று சாதனை படைத்தனர். குத்துச்சண்டை போட்டியிலும் இந்தியா முத்திரைப் பதித்துள்ளது. அதில் நிது கங்காஸ், அமித் பங்கால், நிகத் செரீன் ஆகியோர் தங்க பதக்கங்களை வென்றனர். சாகர் அஹ்லவாட், வெள்ளியையும், ஜாஸ்மின் லம்போரியா, முகமது ஹஷாமுதீன், ரோஹித் டோக்ஸ் ஆகியோர் வெண்கலத்தையும் வென்றனர்.