இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வாள் வீச்சு போட்டி - மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு தங்க பதக்கம்
Aug 10 2022 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வாள் வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் வாள் வீச்சு போட்டி நடைபெறுகிறது. தனி நபர் மகளிர் Sabre பிரிவில் தமிழக வீராங்கனையான பவானி தேவி பங்கேற்றார். இறுதிச்சுற்றில் அவர், ஆஸ்திரேலியாவின் வாஸிலேவாவை சந்தித்தார். தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பவானி தேவி 15 - 10 என்ற புள்ளி கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார்.