சர்வதேச செஸ் போட்டியில் வென்ற இந்திய அணிகளுக்கு பரிசு தொகை அறிவிப்பு - இரு அணிகளுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தமிழக அரசு
Aug 10 2022 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த சதுரங்க விளையாட்டு திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் இந்திய மகளிர் ஏ அணி மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. இதேபோல் பொதுப்பிரிவில் பங்கேற்ற இந்திய பி அணியும் வெண்கலப் பதக்கம் வென்றது. இவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.