இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டி - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நவம்பரில் நடைபெறும் என தகவல்
Aug 15 2022 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நவம்பரில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பழமை வாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெவிலியன் உள்ளிட்ட சில பகுதிகள் இடிக்கப்பட்டு மீண்டும் புது பொலிவுடன் தயாராகி வருகிறது. விரைவில் மைதானம் தயார் நிலைக்கு வர இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் இந்த மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி இங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் உள்ளூர் போட்டியான துலீப் டிராபி போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதிமுதல் 25 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.