ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் - இடது தோளில் காயம் காரணமாக இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகல்
Aug 16 2022 7:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தோளில் காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் இருப்பார். முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 18-ம் தேதி ஹராரேயில் நடக்கிறது. ஹராரே சென்றடைந்த இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்
இடது தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு இடது தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.