மகளிருக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் சென்னையில் இன்று தொடக்கம் - 54 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்பு
Sep 12 2022 8:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகளிருக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் சென்னையில் இன்று தொடங்கும் நிலையில், 54 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி வரும் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஒற்றையர், இரட்டையர் என இரண்டு பிரிவுகளிலும் இந்தியா, அமெரிக்கா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் உட்பட 54 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அனைத்துப் போட்டிகளையும் உலகில் உள்ள பல நாடுகள் நேரடியாக பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த போட்டிகளை பார்வையிட உள்ளனர். இதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரசுப் பள்ளி மாணவர்களும் போட்டிகளை கட்டணமின்றி பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.