ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி -ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
Sep 13 2022 7:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இந்த நிலையில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 23-ஆம் தேதியும் இறுதி மற்றும் 3-வது போட்டி 25 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி கேப்டனாகவும் ரோஹித் சர்மா இருப்பார்.