ஆஸ்திரேலியாவுடனான 20 ஓவர் தொடர் நாளை மறுநாள் தொடக்கம் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு தொற்று உறுதி
Sep 18 2022 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுடனான 20 ஓவர் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந் நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி வருகிற 20-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. நாக்பூரில் 2-வது போட்டி 23-ஆம் தேதியும், இறுதிப் போட்டி 25 ஆம் தேதி ஐதராபாத்திலும் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஷமி விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.