லேவர் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினார் ரோஜர் ஃபெடரர் - கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் விளையாட்டிலிருந்து விடைபெற்றார்
Sep 24 2022 10:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டென்னிஸில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரர், லேவர் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து கண்ணீருடன் விடைபெற்றார்.
சர்வதேச டென்னிஸில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்தார். இந்தநிலையில், நேற்று நடைபெற்ற லேவர் கோப்பை இறுதிப் போட்டியில், ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின. இதில், உலக அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ - ஜாக் சாக் இணையுடன் மோதினார். இந்த போட்டியில், ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 என்ற செட் கணக்கில் டியாபோ - ஜாக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரோஜர் பெடரர் சக வீரர்களை ஆரத்தழுவி கண்ணீருடன் பிரியா விடைபெற்றார்.