ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில வாலிபால் போட்டி : 21 அணிகள் பங்கேற்பு
Oct 3 2022 9:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோட்டில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 அணிகள் பங்கேற்றன. தமிழ்நாடு பாரா வேலி அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 16 ஆண்கள் அணிகளும், 5 பெண்கள் அணிகளும் பங்கேற்றன. புள்ளிகள் அடிப்படையில் பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று சம பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.