இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டி : 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி
Oct 5 2022 10:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றது. இந்நிலையில், இந்தூரில் நடந்த கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 227 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி. இதையடுத்து 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 18 புள்ளி 3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 178 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.