கால் முறிவால் ஓய்வில் இருந்து வரும் ஆஸி. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் : வரும் ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பே ஆர்சிபி அணிக்கு திரும்புவார் என நம்பிக்கை
Nov 16 2022 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கால் முறிவால் ஓய்வில் இருந்துவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல், வரும் ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பே குணடைந்து பெங்களூரு அணிக்கு திரும்புவார் என அந்த அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 12ம் தேதி தனது நண்பரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற மேக்ஸ்வெல், எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அவர் குணமடைய 3 மாதம் தேவைப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள பெங்களூரு அணி நிர்வாக இயக்குநர் Mike Hesson, காயத்திலிருந்து மேக்ஸ்வெல் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், வரும் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே அவர் அணிக்கு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.