நியூசி.க்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? : முதல் டி-20 போட்டியில் நாளை பலப்பரீட்சை
Nov 17 2022 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. டி-20 உலகக்கோப்பையை தொடர்ந்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இதில், முதலாவதாக டி-20 தொடர் நாளை தொடங்குகிறது. வெலிங்டனில் நடைபெறும் முதல் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே நியூசிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.