கத்தார்: கால்பந்து மைதானங்களில் மதுபானம் விற்பனை செய்ய ஃபிஃபா தடை - பட்வைசர் நிறுவனம் அதிருப்தி
Nov 19 2022 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை கால்பந்து மைதானங்களில் மதுபானம் விற்பனை செய்ய ஃபிஃபா தடை விதித்துள்ளது. 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நாளை தொடங்கி அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை காண பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில், போட்டி நடைபெறும் மைதானங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய சர்வதேச கால்பந்து சங்கம் தடை விதித்துள்ளது. இது குறித்து ஃபிஃபா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து ஆல்கஹால் கலந்த பீர் விற்பனை மையங்கள் அகற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஸ்பான்சராக உள்ள பட்வைசர் நிறுவனம் ஃபிஃபாவின் இந்த அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.