விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் : அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 506 ரன்களை குவித்து தமிழக அணி புதிய உலக சாதனை
Nov 21 2022 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி அதிரடியாக ஆடி 506 ரன்களை குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய தமிழக வீரர்கள் ஜெகதீசனும், சாய் சுதர்சனும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.
தமிழக அணி 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்களை எடுத்து
புதிய உலக சாதனை படைத்தது. இதற்கு முன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 498 ரன்களை எடுத்து இருந்ததே உலக சாதனையாக இருந்தது
. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. இதன் மூலம் தமிழக அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.