இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது 20 ஓவர் போட்டி : கேப்டன் கேன் வில்லியம்சன் திடீர் விலகல்
Nov 21 2022 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள 3-வது
20 ஓவர் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நேப்பியரில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களுக்காக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.