இந்தியா-நியூசி. இடையிலான 3வது டி20 போட்டியில் மழை குறுக்கீடு : டிஎல்ஸ் விதிப்படி போட்டி சமன் - தொடரை வென்றது இந்திய அணி
Nov 22 2022 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி-20 போட்டி, மழையின் குறுக்கீட்டால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி சமனில் முடிந்தது. இதனால், இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. நேப்பியரில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 19 புள்ளி 4 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். பின்னர், 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 9 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெற்றிக்கு 76 ரன்கள் இலக்காக இருந்ததால், இப்போட்டி சமனில் முடிந்தது. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது.