காமன்வெல்த் பவர் லிப்டிங்கில் 5 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை நாடு திரும்பினார் : பளு தூக்கும் வீராங்கனை அமுத சுகந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
Dec 4 2022 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்தில் நடந்து முடிந்த, காமன்வெல்த் பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவுக்காக 5 பதக்கங்களை வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனை அமுத சுகந்திக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமுத சுகந்தி, தமிழகத்தில் இருந்து 15 பேர் கலந்து கொண்டு அனைவரும் பதக்கம் வெண்றது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். பளு தூக்கும் போட்டியில் பெண்கள் சாதிப்பது குறைவாகவே இருப்பதாகவும் வரும் காலங்களில் அதிக பெண்கள் இத்துறையில் கால்பதிக்க வேண்டும் என்றும் கூறினார்.