உலக கோப்பை கால்பந்து தொடரில் குரோசியா அணி காலிறுதிக்கு முன்னேற்றம்- பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஜப்பானை வீழ்த்தி அசத்தல்
Dec 6 2022 11:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக கோப்பை கால்பந்து தொடரில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஜப்பானை வீழ்த்தி, குரோசியா அணி, காலிறுதிக்கு முன்னேறியது.
கத்தாரில் நேற்றிரவு நடைபெற்ற 2ஆம் சுற்று போட்டியில், ஜப்பான்-குரேஷியா அணிகள் மோதின. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஜப்பான் , ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, முன்னிலை வகித்தது. 2ஆவது பாதியின் 55ஆவது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்ததால் இரு அணிகளும் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில், குரோசியா அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.
குரோசியா அணி காலிறுதிக்கு முன்னேறியதை அந்நாட்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். தலைநகர் ZAGREBல் திரண்ட குரோசியா நாட்டு கால்பந்து ரசிகர்கள், நடனமாடியும், கோஷம் எழுப்பியும், வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.